Monday, July 25, 2011


சிரிப்பில் உன் முகம் மலரக் கண்டேன் தோழி….
கண்கள் நம்மை ஏமாற்றுவதுண்டு!
என் கண்களும் விதி விலக்கல்ல – 
உணர்ந்தேன், நீ சிரிப்பது உனக்காக அல்ல – 
ஊருக்காக என்று!! பாவம் கண்களில் தவறில்லை –
புரிந்துக்கொள்ள நீயும் பக்கத்தில் இல்லை!
பிரிதல் காதலில் மட்டும் இல்லை, நட்பிலும் உண்டு – 
உணர்ந்தேன் உன் பிரிவைக் கண்டு!!!

No comments:

Post a Comment